வந்தார்கள்; எடுத்தார்கள்; சென்றார்கள் - ஒரு நிமிடத்துக்குள் நடந்த வங்கிக் கொள்ளை!

வந்தார்கள்; எடுத்தார்கள்; சென்றார்கள் - ஒரு நிமிடத்துக்குள் நடந்த வங்கிக் கொள்ளை!

வந்தார்கள்; எடுத்தார்கள்; சென்றார்கள் - ஒரு நிமிடத்துக்குள் நடந்த வங்கிக் கொள்ளை!
Published on

அதிவேகமாக வங்கிக்குள் நுழைந்து ஒரு நிமிடத்துக்குள் ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற 6 கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்

பீகார் மாநிலம், முஸாபர்பூர் என்ற இடத்தில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று தலையில் ஹெல்மெட் மாட்டியபடி வங்கிக்குள் நுழைந்த 6 பேர் அதிவேகமாக செயல்பட்டு கவுன்ட்டரில் இருந்து ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்துச் மின்னல் வேகத்தில் தப்பித்துச் சென்றனர். உள்ளே நுழைந்ததும் இருவர் அங்கிருந்த வாடிக்கையாளர்களையும், வங்கி ஊழியர்களையும் கட்டுப்படுத்தியுள்ளனர். இருவர் காவலாளியின் துப்பாக்கியைப் பிடிங்கி அவரை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். 

மற்றவர்கள் வங்கி பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இந்த கொள்ளைச்சம்பவம் வங்கியில் பொருத்தப்பட்ட கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. ஆனால் கொள்ளையர்கள் ஹெல்மெட் மாட்டி இருந்ததால் அடையாளம் காணுவதில் சிரமம் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வங்கியில் இருந்து 8 லட்சத்து 5ஆயிரத்து 115 ரூபாய் கொள்ளை போனதாக வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.

கொள்ளை குறித்து தகவல் தெரிவித்த காவல் அதிகாரி, 6 கொள்ளையர்களும் ஒரு நிமிடத்துக்குள் கொள்ளையடித்துவிட்டு வெளியேறியுள்ளனர்.அதில் இருவர் சிறுவர்கள் போல உடல்வாகு இருந்துள்ளதாக தெரிகிறது. தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளோம். கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com