துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை: சிசிடிவி காட்சியில் அதிர்ச்சி

துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை: சிசிடிவி காட்சியில் அதிர்ச்சி
துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை: சிசிடிவி காட்சியில் அதிர்ச்சி

பீகார் மாநிலத்தில் நடந்த வங்கி கொள்ளைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தின் கோபர்சாஹி பகுதியில் ஐசிஐசிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. அங்கு, முகத்தை மூடியப்படி துப்பாக்கியுடன் 6 பேர் நுழைந்தனர். அவர்கள் வங்கி ஊழியர்களை மிரட்டி, சுமார் 8 லட்சம் ரூபாயை கொள்ளை யடித்துச் சென்றனர். வங்கி காவலாளியின் துப்பாக்கியையும் திருடிச் சென்றுள்ளனர். ஒரு நிமிடத்தில் நடந்து முடிந்து விட்டது, யாரும் எதிர்பார்க்காத இந்த கொள்ளை. இதையடுத்து, சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள் ளையர்களை ‌காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுபற்றி முசாஃபர்பூர் போலீஸ் அதிகாரி மனோஜ்குமார் கூறும்போது, ’’இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களில் இரண்டு மூன்று பேர் சிறுவர்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள்’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com