சர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்

சர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்
சர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து நீக்கப்பட்டுள்ளார். 

புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்காக ஒரு நாட்டையோ, தனிப்பட்ட நபரையோ எப்படிக் குறை சொல்ல முடியும்? என நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்திருந்தார்.  ‘’இது கோழைத்தனமான செயல். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரமான தீர்வு காணவேண் டும். தீவிரவாதத்துக்கென்று எந்த நாடும் இல்லை, மதமும் இல்லை.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் கடுமையாக, கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்றும் கூறியிருந்தார். சித்துவின் கருத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் எழுந்தன. 

இந்நிலையில் சேனல் ஒன்றின் ’கபில் சர்மா ஷோ’ என்ற நிகழ்ச்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல ஆண்டுகளாக அவர் கலந்துகொண்டு வந்தார்.  அவருக்கு பதிலாக நடிகை அர்ச்சனா பூரன் சிங் இந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com