’அது பாசத்தின் வெளிப்பாடு’: தொண்டரை அடித்தது பற்றி சித்தராமையா விளக்கம்

’அது பாசத்தின் வெளிப்பாடு’: தொண்டரை அடித்தது பற்றி சித்தராமையா விளக்கம்
’அது பாசத்தின் வெளிப்பாடு’: தொண்டரை அடித்தது பற்றி சித்தராமையா விளக்கம்

பாசத்தின் காரணமாகவே தொண்டரை அடித்ததாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.

சித்தராமையா, தனது உதவியாளர்களுடன் கடந்த புதன்கிழமை மைசூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து விட்டு வெளியே சென்றார். அப்போது, அவரது உதவியாளர் நடனஹள்ளி ரவி என்பவர், செல்போனை சித்தராமை யாவின் காதின் அருகே கொண்டு சென்று, ‘அதிகாரி இணைப்பில் இருக்கிறார். பேச வேண்டுமாம்’ எனக் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சித்தராமையா, உதவியாளரின் கன்னத்தில் பளார் என அறைந்தார். பொது இடத்தில் அவர் நடந்துகொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் உதவியாளரை தாக்கும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலானது.

இந்நிலையில், அவரை தாக்கியது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார் சித்தராமையா. அவர், ’’ரவி, என் மகன் போன்றவர். நீண்டகாலமாக அவருக்கு நான் வழிகாட்டியாக இருந்து வருகிறேன். இதுபோன்று பலருக்கு நான் வழிகாட்டியாக இருக்கிறேன். அதனால் அக்கறையின் அடிப்படையில் பாசத்தையும் அதிருப்தியையும் அவர்கள் மீது எப்போதும் நான் வெளிப்படுத்துவேன். அப்படித்தான் அன்றும் நடந்தது’’ என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com