ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு - 2 பயங்கரவாதிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு - 2 பயங்கரவாதிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு - 2 பயங்கரவாதிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் இருவேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உட்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதே போன்று அனந்தனங் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் லக்ஷர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இரண்டு பேரும் கடந்த மாதம் நடைபெற்ற வாட்நாட் என்கவுன்ட்டரில் தப்பியவர்கள் என்று காஷ்மீர் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு பயங்கரவாத செயல்களில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.




Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com