கார்ட்டூன் சேனல் பார்க்க விடாததால் சிறுவன் தற்கொலை

கார்ட்டூன் சேனல் பார்க்க விடாததால் சிறுவன் தற்கொலை

கார்ட்டூன் சேனல் பார்க்க விடாததால் சிறுவன் தற்கொலை
Published on

டிவியில் கார்ட்டூன் பார்க்க தாய் மறுத்ததால் 14வயது மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புனேவில் நடந்துள்ளது.

புனேவில் பிப்வெவாடி பகுதியில் இந்தச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்துத் தெரிவித்துள்ள போலீசார், 14 வயது சிறுவன் காலை முதலே டிவியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அதே நேரம் அவருடைய பாட்டி செய்தி பார்க்க வேண்டுமெனக் கூறியுள்ளார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து சிறுவனின் அம்மா, டிவியை ஆஃப் செய்துவிட்டுச் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன் மாடிக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். சிறுவனின் சகோதரி மாடிக்குச் சென்று பார்த்தபோது துப்பட்டாவில் சிறுவன் தூக்கிட்ட நிலையில் இருந்ததைக் கண்டு குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தற்கொலை என்பது எந்தப் பிரச்னைக்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com