நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்வரை ஃபட்னாவிஸ் கொள்கை முடிவு எடுக்கக்கூடாது - சிவசேனா புதிய மனு

நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்வரை ஃபட்னாவிஸ் கொள்கை முடிவு எடுக்கக்கூடாது - சிவசேனா புதிய மனு
நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்வரை ஃபட்னாவிஸ் கொள்கை முடிவு எடுக்கக்கூடாது - சிவசேனா புதிய மனு

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை ஃபட்னாவிஸ் கொள்கை முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும் என சிவசேனா புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஃபட்னாவிஸை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி ஃபட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இந்நிலையில், மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை ஃபட்னாவிஸ் கொள்கை முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும் என சிவசேனா புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com