உத்தவ்வை விமர்சித்த பாஜக தலைவர் மீது மை ஊற்றிய சேலை கட்ட முயற்சித்த சிவசேனா தொண்டர்கள்

உத்தவ்வை விமர்சித்த பாஜக தலைவர் மீது மை ஊற்றிய சேலை கட்ட முயற்சித்த சிவசேனா தொண்டர்கள்
உத்தவ்வை விமர்சித்த பாஜக தலைவர் மீது மை ஊற்றிய சேலை கட்ட முயற்சித்த சிவசேனா தொண்டர்கள்

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்த பாஜக நிர்வாகி மீது கருப்பு மை ஊற்றி சேலை அணியுமாறு கட்டாயப்படுத்திய சிவசேனா தொண்டர்கள் 17 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்த சோலாப்பூர் மாவட்ட பாஜக தலைவர் ஷிரிஷ் கட்டேகர் மீது சிவசேனா தொண்டர்கள் கருப்பு மை ஊற்றியதாகவும், அந்த நபரை சேலை அணியுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. "எங்கள் முதல்வருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியது கட்டேகர் தான். சிவசேனா தொண்டர்களை பொறுத்தவரை, உத்தவ் ஒரு மதிப்பிற்குரிய நபர், அவருக்கு எதிராக எதையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இந்த தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம், எங்கள் நடவடிக்கைக்காக சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறோம், ”என்று சிவசேனை தொண்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீது சோலாப்பூர் போலீசார் எஃப்..ஆர் பதிவு செய்துள்ளனர், மேலும் அவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> I Maharashtra: Shiv Sena workers allegedly pour black ink on a BJP leader and forced him to wear a saree after the latter criticised Chief Minister Uddhav Thackeray, in Solapur <a href="https://t.co/gdtL9gChT1">pic.twitter.com/gdtL9gChT1</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1358446399960932353?ref_src=twsrc%5Etfw">February 7, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com