“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” -  உத்தவ் தாக்கரே

 “காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” -  உத்தவ் தாக்கரே
 “காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” -  உத்தவ் தாக்கரே

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று சிவசேனா உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் முடிவு வந்து 19 நாட்கள் ஆகியும் யாரும் ஆட்சி அமைக்காததால் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அங்கு இன்னும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சிவசேனாவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“பாஜக-சிவசேனா கூட்டணி இத்தனை ஆண்டுகளாக இருந்தது. ஆனால் தற்போது அது முறிந்துள்ளது. தற்போது நாங்கள் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியுடன் இணைந்து செயல்பட உள்ளோம். இது தொடர்பாக இந்த இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் சாவந்த்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிலர் அமைச்சர் பதவி மீது மிகுந்த ஆர்வம் கொண்டு இருப்பார்கள், ஆனால் அரவிந்த் சாவந்த் அந்த மாதிரி இல்லை. ஆகவே தான் நான் அவரை கண்டு பெருமைபடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com