சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசி தரூருக்கு ஜாமீன்

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசி தரூருக்கு ஜாமீன்
சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசி தரூருக்கு ஜாமீன்

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பான வழக்கில் சசி தரூருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உதவ தன்னை அனுமதிக்ககோரி சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவுக்கு அரசு தரப்பும், சசி தரூர் தரப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சசி தரூர் நேரில் ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், டெல்லி அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே முன் ஜாமீன் வழங்கியுள்ளதால், தனியாக ஜாமீன் கோரி விண்ணப்பிக்க தேவையில்லை என கூறியது.

இந்த வழக்கில் அரசு தரப்புக்கு உதவ தன்னை அனுமதிக்கவேண்டும் என்றும் காவல்துறையின் விசாரணை அறிக்கையை தனக்கு தரவேண்டும் என்றும் கூறி சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவிற்கு அரசு தரப்பு வழக்கறிஞரும், சசி தரூர் தரப்பு வழக்கறிஞரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொள்ள சுப்பிரமணியன் சுவாமிக்கு முகாந்திரம் இல்லை என்று சசிதரூர் தரப்பு வாதிட்டது. இதையடுத்து ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கை குறித்து முடிவு செய்ய ஜூலை 26-ம் தேதியை நிர்ணயம் செய்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com