ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நீட்டிப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நீட்டிப்பு
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நீட்டிப்பு

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது

சக்தி காந்த தாஸின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 10ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் அதை மேலும் நீட்டித்து, நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்படி சக்திகாந்த தாஸ் மேலும் 3 ஆண்டுகளுக்கோ அல்லது மேற்கொண்டு உத்தரவு வரும் வரையோ ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிஷாவை சேர்ந்தவரான சக்திகாந்த தாஸ் தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com