பெங்களூரு
பெங்களூருpt web

தங்கத்திற்கு இணையான டிமாண்ட்.. கடும் பஞ்சத்தால் பெங்களூருவில் மிகப்பெரிய வியாபாரமாக மாறிய தண்ணீர்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், தற்போது தண்ணீர் மிகப்பெரிய வியாபாரமாக மாறியுள்ளது. தங்கத்துக்கு இணையாக தண்ணீர் உள்ளதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
Published on

பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நகரில் 3,000க்கும் மேற்பட்ட அழ்த்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால் மக்கள் தண்ணீர் லாரியை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூருவில் தண்ணீர் பிரச்னை தொடங்கிவிட்டது. ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில், மக்களின் அன்றாட தண்ணீர் தேவையில் 1,500 மில்லியன் லிட்டர் பற்றாக்குறை உள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு தனியார் பள்ளிகள், பயிற்சி மையங்கள் தற்காலிகமாக மூடி, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளன. விஜயநகரில் உள்ள பயிற்சி மையம் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு எடுக்கப்படுகிறது. இதேபோல், பன்னர்கட்டா சாலையில் உள்ள தனியார் பள்ளி, குடிநீர் தட்டுப்பாட்டை குறிப்பிடாமல் அவசர நிலை காரணமாக, பள்ளி தற்காலிகமாக மூடப்படுவதாகவும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com