எழுவர் விடுதலை பற்றி ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்: சிபிஐ

எழுவர் விடுதலை பற்றி ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்: சிபிஐ
எழுவர் விடுதலை பற்றி ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்: சிபிஐ

பேரறிவாளன் உட்பட ஏழுபேர் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநரிடம்தான் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிபிஐ, உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கு விசாரணை பற்றிய எந்த ஆவணங்கள் அல்லது தகவல்களை தருமாறு தமிழக ஆளுநரிடம் இருந்து எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை” என தெரிவித்துள்ளது.

இந்திய அரசியலமைப்பின் 161 வது பிரிவின் கீழ் ஏழுபேரை முன்கூட்டியே  விடுதலை செய்யும் பிரச்னையை தீர்மானிக்க சிபிஐ அமைத்த பல பலதரப்பு கண்காணிப்பு நிறுவனத்திடமிருந்து(எம்டிஎம்ஏ) இறுதி அறிக்கைக்காக அரசியலமைப்பு அதிகாரம் காத்திருக்கிறது என்று அரசாங்கத்தால் இந்த நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாலும், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும்தான்,  இந்த நீதிமன்றம் எந்தவொரு அவதானிப்பையும் செய்வதைத் தவிர்க்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com