மருத்துவமனையில் அருண் ஜெட்லி..  நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு

மருத்துவமனையில் அருண் ஜெட்லி..  நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
மருத்துவமனையில் அருண் ஜெட்லி..  நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் நேற்று நள்ளிரவில் சந்தித்தனர்.  

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அப்போதிருந்து ஜெட்லியின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகவில்லை. 

இந்நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பிற்பகலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மருத்துவமனைக்கு சென்று ஜெட்லியைப் பார்த்தார். அத்துடன் நேற்று நள்ளிரவு 11.15 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மருத்துமவனைக்குச் சென்று அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இணை அமைச்சர் அஸ்வினி சவுபே ஆகியோரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லியின் உடல்நிலையை பார்வையிட்டனர். 66 வயதாகும் அருண் ஜெட்லி, கடந்த ஓராண்டாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com