இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பின் இந்த விவகாரம் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் மீண்டும் மனம் திறந்துள்ளார். அதிருப்தி காரணமாக கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு மாறுவோர் நாங்கள் அல்ல என்றும், கட்சித் தலைமையுடன் நெருக்கமாக இருந்தவர்களே, அவர்களை விட்டு விலகிச் சென்றிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எப்போதும் கட்சியை விட்டு விலகிச் செல்ல மாட்டோம் எனக் கூறிய அவர், காங்கிரஸ் காரிய கமிட்டியை கூட்டும்படி மூத்த தலைவர் ஒருவர் கடிதம் எழுதியிருப்பதாகவும், காரிய கமிட்டி கூடினால்தான் நாங்கள் ஏன் இப்படி இருக்கிறோம் என்பதை தெரிவிக்க முடியும் என்றும் கூறினார்.