தலிபான் தொடர்பான கருத்து - சமாஜ்வாடி எம்.பி.க்கு எதிராக உ.பி அரசு தேசத்துரோக வழக்கு

தலிபான் தொடர்பான கருத்து - சமாஜ்வாடி எம்.பி.க்கு எதிராக உ.பி அரசு தேசத்துரோக வழக்கு
தலிபான் தொடர்பான கருத்து - சமாஜ்வாடி எம்.பி.க்கு எதிராக உ.பி அரசு தேசத்துரோக வழக்கு

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை தலிபானுடன் ஒப்பிட்டமைக்காக, சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.யொருவர் மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த இருவர் என மொத்தம் மூவர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியது, ஆப்கான் மக்களை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பல்வேறு நாடுகளில் தலிபான்கள், பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் தலிபான்கள் அமைக்கவிருக்கும் அரசை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.
இந்நிலையில் தலிபான்களின் வெற்றி தொடர்பாக உ.பி.யின் சமாஜ்வாடி கட்சியின் ஷாபிக்கர் ரஹ்மான் பார்க், நேற்றைய தினம் பத்திரிகையாளர் மத்தியில் “பிரிட்டிஷ் அரசு இருந்தபோது இந்தியா சுதந்திரத்திற்காக போராடியது. அதேபோல் தலிபான் தங்கள் சுதந்திரத்திற்கு போராடியது. அதன்படி தாங்கள் இழந்த நாட்டை அவர்கள் மீண்டும் மீட்டு இருக்கிறார்கள். தங்களின் சொந்த நிலத்தையே அவர்கள் மீட்டு உள்ளனர். தலிபான்கள் தங்களின் சுதந்திரத்திற்காக ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளை காலங்காலமாக எதிர்த்து போராடி வெற்றி கண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் மக்கள் சுதந்திரம் பெற்று, சுயமாக ஆட்சி நடத்த விரும்புகிறார்கள்” எனக்கூறியிருந்தார். இதற்காக தற்போது அவர்மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.
சாம்பல் மாவட்டத்தின் காவல் ஆணையர் சக்ரேஷ் மிஷ்ரா இதுபற்றி தெரிவிக்கையில், “எம்.பி. ஷாபிக்கர் ரஹ்மான் பார்க் மற்றும் இருவர் மீது, தலிபான்களை பற்றி மோசமான கருத்துகளை முன்வைத்தமைக்காக வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கில் அவர்கள் தலிபான்களை இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டதும், அவர்களின் வெற்றி இவர்களால் கொண்டாடப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலிபான் என்பது இந்திய அரசியல் சட்டத்தின்படி, பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட அமைப்பாகும். அதன்படி பார்க்கும்போது, இந்த எம்.பி.க்கள் மற்றும் இருவரின் கருத்துகள், தேசத்துரோகமாக பார்க்கப்படுகிறது. அதனாலேயே எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டுள்ளது” எனக்கூறியுள்ளார்.

ஷாபிக்கர் ரஹ்மான் பார்க், தற்போது பேசுகையில், “இவர்கள் சொல்வது போல நான் தலிபான்களை எவருடனும் (இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன்) ஒப்பிடவில்லை. என் கருத்து, திரிக்கப்பட்டுள்ளது. நான் ஆப்கன் குடிமகனில்லை... இந்திய குடிமகன்தான். அப்படியிருக்கும்போது, எனக்கு ஆப்கன் குறித்து பேசவேண்டிய எந்த அவசியமும் இல்லை.

நான், என்னுடைய நாட்டின் அரசு விதிகளுக்குட்பட்டே எதுவாகினும் செயல்படுவேன்” எனக்கூறியுள்ளார்.

ஷாபிக்கர் ரஹ்மான் பார்க்கின் இந்தக் கருத்தை, உ.பி.யின் துணை முதல்வர் கேசவ் மௌரியா கடுமையாக விமர்சித்துள்ளார். “சமாஜ்வாடி கட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவர்களில் சிலர் ’ஜன கன மன’ தேசியகீதம் பாடமாட்டாரகள்; இன்னும் சிலர் இப்படி தலிபான்களுக்கு ஆதரவு தெரிவிப்பர்; இன்னும் சிலர் பயங்கரவாதிகள் பிடிப்பட்டால் காவல்துறையை குற்றம் சொல்வர்” என காட்டமாக கூறியுள்ளார். மேலும் “இந்த எம்.பி. ஹாபிக்கர் ரஹ்மான் பார்க் கூறிய கருத்து உண்மையெனில், இவருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் கானின் தலிபான் வெற்றி வரவேற்புக்கும் வித்தியாசமில்லை” எனக்கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com