20 தீவிரவாதிகள் ஊடுருவல்: மும்பை, டெல்லி அலர்ட்!

20 தீவிரவாதிகள் ஊடுருவல்: மும்பை, டெல்லி அலர்ட்!
20 தீவிரவாதிகள் ஊடுருவல்: மும்பை, டெல்லி அலர்ட்!

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் பகுதியில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் ராணுவத்தினரும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்களும் இந்திய ராணுவத்தினரும் பலியாகி வருவது தொடர்கதையாகி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் அவர்களுக்கு உதவும் பாக். ராணுவத்துக்கும் இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாதிகள் 20 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாகவும் இவர்கள் மும்பை, டெல்லி அல்லது பஞ்சாப், ராஜஸ்தானில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை செய்துள்ளன.

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் தற்கொலை படை தாக்குதல் அல்லது குண்டு வைப்பது ஆகிய நாசவேலைகளை அவர்கள் செய்யக்கூடும் என கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com