நாளை குடியரசுதினம்: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

நாளை குடியரசுதினம்: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

நாளை குடியரசுதினம்: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

குடியரசு தினவிழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமானநிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள விஜய்சோ பகுதியைச் சுற்றி உள்ள 5 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூட கூடிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் உள்ள முக்கியமான மின்பகிர்மான நிலையங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் போராடும் விவசாயிகளின் இடங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்து நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. கொரோனா அச்சத்தால் 50 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சிறப்பு விருந்தினர்கள் யாரும் பங்கேற்காமல் இந்தியாவில் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com