மேகாலயா சுரங்கத்தில் மேலும் ஒரு உடல் கண்டுபிடிப்பு!

மேகாலயா சுரங்கத்தில் மேலும் ஒரு உடல் கண்டுபிடிப்பு!
மேகாலயா சுரங்கத்தில் மேலும் ஒரு உடல் கண்டுபிடிப்பு!

மேகாலயா மாநிலத்தில், சுரங்க விபத்தில் சிக்கிய மேலும் ஒரு தொழிலாளியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேகாலயாவில் உள்ள கிழக்கு ஜைண்டியா மாவட்டத்தில், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி சட்டவிரோத சுரங்கத்தில் நிலக்கரி எடுக்க, 13 தொழிலாளர்கள் சென்றனர். அப்போது, மழை வெள்ளம் காரணமாக அருகில் இருந்த லைத்தின் ஆற்றின் தண்ணீர் சுரங்கத்துக்குள் புகுந்தது. இதனால் ’எலி வளை சுரங்கம்’ எனப்படும் சிறிய வாசலை கொண்ட சுரங்கத்துக்குள் நுழைந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களால் வெளியேற முடியவில்லை.

தொழிலாளர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புப் படை, கடற்படை, தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஒரு மாதம் ஆன நிலையில், ஒரு தொழிலாளியின் கடந்த வியாழக்கிழமை முன் மீட்கப்பட்டது. அது அசாமைச் சேர்ந்த அமிர் ஹூசைன் என்பது தெரிய வந்தது.

அணிந்திருந்த மோதிரத்தை வைத்து அமிரை அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டனர். பின்னர் அவரது உறவினர்களிடத்தில் உடல் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்த நிலையில் மேலும் ஒரு உடல், நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com