கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

கொல்கத்தாவின் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் இன்று நீக்கி உத்தரவிட்டது. 

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது. அதில், ராஜீவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வும் ராஜீவ் குமார் சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. 

இவ்வழக்கில் தொடர்புடைய சிலரை காப்பாற்றுவதற்காக, ராஜீவ் குமார் முயற்சிப்பதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் ராஜீவ் குமாரை துன்புறுத்துவதற்காகவே சிபிஐ காவலில் எடுக்க அனுமதி கேட்கிறது என அவரது  வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜீவ்குமாரை, சிபிஐ கைது செய்ய விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. 7 நாட்களில் கைது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் அதற்குள் உரிய நீதீமன்றத்தை அணுகி ராஜீவ்குமார் முன்ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com