“விலை மதிப்பற்ற வாழ்நாட்களை இழந்து வருகிறோம்”- காற்று மாசு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

“விலை மதிப்பற்ற வாழ்நாட்களை இழந்து வருகிறோம்”- காற்று மாசு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

“விலை மதிப்பற்ற வாழ்நாட்களை இழந்து வருகிறோம்”- காற்று மாசு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
Published on

டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு குறித்த வழக்கில், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநில தலைமைச் செயலர்களுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது‌.

டெல்லியில் நிலவும் காற்று மாசு தொடர்பான வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுற்றுச்சூழல் துறை இணைச் செயலாளர் ஆஜராகி விளக்கமளித்தார். பயிர்க்கழிவுகளை எரிப்பதைத் தடுக்க ரோந்துக் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார். காற்று மாசுபாட்டினால், விலை மதிப்பற்ற வாழ்நாட்களை இழந்து வருவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இந்தச் சூழல், எமர்ஜென்சி சூழலைவிட மோசமாக உள்ளதென அவர்கள் கூறினர். மேலும், பயிர்க்கழிவுகள் எரிப்பைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 6-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்ப நீதிபதிகள் ஆணையிட்டனர்.

இனியும்‌ பயிர்க் கழிவுகள் எரிக்கப்பட்டால், கிராமத் ‌தலைவர் முதல் மாநில தலைமைச் செயலாளர் வரை அனைத்து அதிகாரிகளும் பொறுப்பு என்றும் அவர்கள் கூறினர். மேலும், மறு‌உத்தரவு வரும் வரை டெல்லியில் கட்டடங்கள் கட்டவும், கட்டுமானங்களை இடிக்கவும், திறந்தவெளியில் குப்பைகளை எரிக்கவும், ஜெனரேட்டர்களை இயக்கவும் கூடாதென நீதி‌பதி‌கள் ஆணையிட்டனர். மீறினால் ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு அபராதம் விதிக்கப்படுமென எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com