ஆதாரை இணைப்பதால் எதுவும் நடக்காது: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு

ஆதாரை இணைப்பதால் எதுவும் நடக்காது: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு

ஆதாரை இணைப்பதால் எதுவும் நடக்காது: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு
Published on

ஆதார் மூலம் வங்கி கொள்ளைகளை தடுக்க முடியும் என்ற மத்திய அரசின் கருத்தை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

சமூக நலத் திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதும் அரசியல் சாசன அமர்வு விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஓய். சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

விசாரணையின் போது, ஆதார் எண்ணை இணைப்பதால் பயங்கரவாதம் மற்றும் வங்கி மோசடியை தடுக்க முடியும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் மத்திய அரசின் கருத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், “மோசடியாளர்களை தடுக்க ஆதார் எண்ணை இணைப்பது தீர்வாகாது. மோசடி செய்பவர்களின் அடையாளங்கள் வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. யாருக்கு கடன் கொடுக்கிறோம் என்பது வங்கிக்கு தெரியும். வங்கி அதிகாரிகள் மோசடியார்களுடன் கைகோர்த்து உள்ள நிலையில் எப்படி வங்கி மோசடியை தடுக்கும். ஆதார் எண்ணை வைத்து சிறிதளவுதான் மோசடிக்காரர்களை கட்டுப்படுத்த முடியும். ஒரு தனிநபரின் வங்கி பரிவர்த்தனைகளை ஆதார் தடுக்காது. அதேபோல் தான் வங்கி மோசடிகளையும் தடுக்க முடியாது” என்று நீதிபதிகள் கூறினர்

மேலும், “தீவிரவாதிகள் மொபைல் சிம் கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்களா?. இதில் பிரச்னை என்னவென்றால், சில தீவிரவாதிகளை பிடிப்பதற்காக 120 கோடி மக்களின் மொபைல் போனை ஆதார் எண்ணுடன் இணைக்க சொல்கிறீர்கள்” என்று நீதிபதிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com