“'எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்கில் புகாரை பதிவு செய்தால் கைது செய்ய தடையில்லை”- உச்சநீதிமன்றம்

“'எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்கில் புகாரை பதிவு செய்தால் கைது செய்ய தடையில்லை”- உச்சநீதிமன்றம்
“'எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்கில் புகாரை பதிவு செய்தால் கைது செய்ய தடையில்லை”- உச்சநீதிமன்றம்

பட்டியலினத்தவர் வன்கொடுமை வழக்கில் புகாரை பதிவு செய்தாலே கைது செய்து விசாரிக்க சட்டத்தில் இடமுள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பட்டியலினத்தவர் வன்கொடுமை வழக்கு பதிந்தாலே கைது செய்து விசாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்ற 2 நீதிபதிகள் ஏற்கெனவே அளித்த தீர்ப்பை 3 நீதிபதிகள் அமர்வு தற்போது திரும்பப் பெற்றுள்ளது. எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் கைது செய்ய தடையில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. சட்டம் இயற்றும் அதிகாரத்துக்குள் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற அடிப்படையில் உத்தரவு திரும்பப் பெறப்பட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

புகார் அளிக்கப்பட்டாலே கைது செய்து விசாரிக்கும் சட்ட வழிமுறையை மாற்ற வேண்டாம் என நீதிமன்றத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com