புதுச்சேரியில் நடைபெற்ற பாய்மரப் படகு அணிவகுப்பு: எதற்காக தெரியுமா?

புதுச்சேரியில் நடைபெற்ற பாய்மரப் படகு அணிவகுப்பு: எதற்காக தெரியுமா?
புதுச்சேரியில் நடைபெற்ற பாய்மரப் படகு அணிவகுப்பு: எதற்காக தெரியுமா?

பிரான்ஸ் நாட்டின் வசந்தகால திருவிழாவை யொட்டி புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற பாய்மரப் படகு அணிவகுப்புகளை புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

சுற்றுலா நகரமான புதுச்சேரியில், சுற்றுலா பயணியரை கவர பல்வேறு நிகழ்ச்சியில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் தாக்கத்தால் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படாத நிலையில், தற்போது புதுச்சேரியில் கொரோனாவின் தாக்கம் குறைந்து பூஜ்ய நிலைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் வசந்த கால திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரியில் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பாய்மர படகு சங்கம் மற்றும் பிரெஞ்சு தூதரகம் இணைந்து பாய்மரப் படகு அணிவகுப்பை நடத்தியது.

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை பின்புறம் உள்ள கடல் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட பாய்மரப் படகுகளில் 9 வயது முதல் 60 வயது வரை உள்ள 20-க்கும் மேற்பட்ட பாய்மரப் படகு வீரர்கள் அணிவகுப்பு மேற்கொண்டு பல்வேறு கடல் சாகசங்களையும் செய்து காட்டினர்.

இந்த பாய்மரப் படகு அணிவகுப்பை பிரஞ்சு துணை தூதர் லிசே டபோட் பரே மற்றும் புதுச்சேரி மாநில அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதுச்சேரி கடற்கரையில் நிகழ்த்தப்பட்ட இந்த பாய்மரப் படகு அணிவகுப்பை புதுச்சேரி கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com