தெருவை சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

தெருவை சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்
தெருவை சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

தூய்மையே சேவை திட்டத்தின் கீழ், மும்பையில் உள்ள சில தெருக்களை நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் சுத்தம் செய்தார்.

பிரதமர் அழைப்பு விடுத்துள்ள தூய்மையே சேவை பரப்புரையில், இந்தியாவின் பிரபலங்கள் பலரும் இணைந்து வருகின்றனர். இதில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் அனில் அம்பானியின் மனைவி நீதா, நடிகர் அக்ஷய் குமார், நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் தூய்மையே சேவை பரப்புரையின் ஒரு பகுதியாக, தூய்மை மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்திற்கு சமீபத்தில் ஆதரவு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், தூய்மையே கடவுள் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மும்பையில் உள்ள சில தெருக்களை இன்று அதிகாலை சச்சின் டெண்டுல்கர் சுத்தம் செய்தார். அத்துடன் சுத்தம் செய்து குவித்த குப்பைகளை சேகரித்து அவர் அப்புறப்படுத்தினார். பகல் நேரங்களில் தூய்மைப் பணியில் ஈடுபட்டால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், அதிகாலை நேரத்தில் சச்சின் தூய்மை சேவையில் ஈடுபட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com