சபரிமலை கோயில் நடை வரும் 14 ஆம் தேதி திறப்பு

சபரிமலை கோயில் நடை வரும் 14 ஆம் தேதி திறப்பு

சபரிமலை கோயில் நடை வரும் 14 ஆம் தேதி திறப்பு
Published on

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 14-ம் தேதி திறக்கப்படுகிறது.
 
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக, வரும் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து தீபாராதனை காட்டுவார். அன்று சிறப்பு பூஜைகள் நடக்காது. மறுநாள் அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.

பின்னர், பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 11-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 12-ம் தேதி பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். மீண்டும் ஆனி மாத பூஜைக்காக, ஜூன் 15-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 20-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com