சபரிமலை கோயில்: நவம்பரில் இருந்து பக்தர்களை அனுமதிக்க முடிவு !

சபரிமலை கோயில்: நவம்பரில் இருந்து பக்தர்களை அனுமதிக்க முடிவு !

சபரிமலை கோயில்: நவம்பரில் இருந்து பக்தர்களை அனுமதிக்க முடிவு !
Published on

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் மாதத்தில் இருந்து விதிமுறைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.

ஓணம் பண்டிகை மற்றும் உத்ராடம், திருவோண சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2ம் தேதி வரை பக்தர்கள் தரிசனமின்றி வழக்கமான பூஜைகள் நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது.

கும்பம் மாத பூஜைக்காக அக்டோபர் 16ஆம் தேதி நடை திறக்கும்போது பரிட்சார்த்த முறையில் பக்தர்களை அனுமதிக்க ஆலோசிப்பதாகவும், வரும் நவம்பர் 16ம் தேதி துவங்கும் மண்டல பூஜைக்காலம் முதல் சபரிமலையில் விதிமுறைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்திருப்பதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com