5 நாட்களுக்கு பிறகு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

5 நாட்களுக்கு பிறகு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

5 நாட்களுக்கு பிறகு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு
Published on

5 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பிறகு சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை அடைக்கப்பட்டது.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ஆம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் வழக்கமான பூஜைகளுடன், சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வந்தன. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில், முதல் நாள் மட்டும் 5ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மற்ற நாட்களில் 10ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று பூஜையின் நிறைவு நாளில் கலச பூஜை நடைபெற்று, நடை சாத்தப்பட்டது. ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகைக்காக அடுத்த மாதம் 15 ஆம் தேதி கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com