பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்கும் பணிக்கு ரூ.75லட்சம் செலவு

பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்கும் பணிக்கு ரூ.75லட்சம் செலவு

பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்கும் பணிக்கு ரூ.75லட்சம் செலவு

கேரளாவில் பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்கும் பணிக்கு கேரள அரசு 75 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலக்காட்டை அடுத்த செரடு பகுதியை சேர்ந்த பாபு என்பவர் கடந்த 7-ஆம் தேதி தனது நண்பர்களுடன் மலை ஏறும்போது, கால் இடறி கீழே விழுந்தார். செங்குத்தான பாறை ஒன்றின் இடுக்கில் சிக்கிய பாபுவை, ராணுவத்தின் மீட்பு குழு உள்ளிட்டோர் பத்திரமாக மீட்டனர்.

இந்த மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களுக்கு வாடகை மட்டுமே 50 லட்சம் ரூபாய் செலவாயிருப்பது தெரியவந்துள்ளது. இது தவிர பணிக்குழுக்களுக்கு 15லட்சம் ரூபாய் என்று இதர செலவு கணக்குகள் கேரள கருவூலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com