சாலையோர வியாபாரிகளுக்குச் சிறப்புக்கடன் திட்டம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சாலையோர வியாபாரிகளுக்குச் சிறப்புக்கடன் திட்டம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சாலையோர வியாபாரிகளுக்குச் சிறப்புக்கடன் திட்டம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Published on

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடியில் சிறப்புக்கடன் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னிறைவு திட்டத்தின் 2ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதில்,“அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் 100% அமல்படுத்தப்படும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குக் குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். முத்ரா திட்டத்தில் குறிப்பிட்ட காலத்தில் கடனை திருப்பி செலுத்துவோருக்கு 2% வட்டிச் சலுகை வழங்கப்படும். இதற்காக ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவித்துள்ளார்.

அத்துடன் சாலையோர வியாபாரிகளுக்குச் சிறப்புக்கடன் வழங்குவதற்காக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். சிறப்புக்கடன் திட்டம் மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயன்பெறுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். மலிவு விலை வீடு திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்படும் எனவும், இதற்காக ரூ.70 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என அறிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com