10 உற்பத்தி துறைகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஊக்கத்தொகை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

10 உற்பத்தி துறைகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஊக்கத்தொகை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
10 உற்பத்தி துறைகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஊக்கத்தொகை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு சலுகைகள் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “ஏசி, எல்இடி பல்ப் உள்ளிட்ட பொருட்கள், ஸ்டீல் ஆகியவற்றின் உற்பத்திக்கு ஊக்கம் வழங்கப்படுகிறது. தொழிற்சாலைகளின் உற்பத்திக்கு ஏற்ப சலுகைகள் அளிக்கப்படும். வாகன் தயாரிப்பு, ஜவுளி உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு சலுகைகள் கிடைக்கும்” என்றார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “சுயசார்பு இந்தியாவை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மருத்துவம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகையாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ2 லட்சம் கோடி செலவிடப்படும். ஜவுளி, உணவுப் பொருள் தயாரிப்பு, பதப்படுத்துதல் ஆகிய துறைகளும் இந்த ஊக்கத் திட்டத்தின் கீழ் வருகின்றன.

சோலார் மின் உற்பத்தி துறைக்கு ரூ.4500 கோடி, இரும்பு உற்பத்தித் துறைக்கு ரூ.6322 கோடி, ஆட்டோமொபைல் துறைக்கு ரூ.57042 கோடி ஊக்கத்தொகை அளிக்கப்படும். ஜவுளித்துறைக்கு ரூ.10,863 கோடி, உணவுப் பொருட்கள் துறைக்கு ரூ.10,900 கோடி வழங்கப்படும். ஊக்கத் தொகை திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு முதலீடுகள் அதிகரிக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com