பீகாரில் எம்எல்ஏ ஒருவர் இளைஞரை கன்னத்தில் அறையும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
பூகாரின் சூர்யகர்கா பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை அங்கிருந்த இளைஞர் ஒருவர் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்குவந்த ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏவான பிரஹலாத் யாதவ், அந்த இளைஞருடன் வாக்குவாதம் செய்கிறார். பின்னர் நிலப் பிரச்னையில் அந்த இளைஞரை மோசமாக திட்டும் எம்எல்ஏ, பின்னர் அந்த இளைஞரின் கன்னத்தில் ஓங்கியும் அறைகிறார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இதனிடையே பாதிக்கப்பட்ட இளைஞர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார், குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.