பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சைக்கிளில் தேஜஸ்வி; ஆட்டோவை கயிறு கட்டி இழுக்கும் சஷி தரூர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சைக்கிளில் தேஜஸ்வி; ஆட்டோவை கயிறு கட்டி இழுக்கும் சஷி தரூர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சைக்கிளில் தேஜஸ்வி; ஆட்டோவை கயிறு கட்டி இழுக்கும் சஷி தரூர்

பெட்ரோ, டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியினர் பல்வேறு வகையில் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர் மற்றும் பிற கட்சித் தொழிலாளர்கள் பெட்ரோல், டீசல் விலையுர்வை கண்டித்து கேரள செயலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆட்டோவை கயிறு கட்டி சாலையில் இழுத்துச் சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அதேபோல் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், பாட்னா செயலகத்திற்கு வெளியே சைக்கிளில் சென்று தனது எதிர்ப்பை பதிவு செய்தார். முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஸ்கூட்டரில் சென்று எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com