வடமாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம் - 48 மணி நேரத்தில் 75க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

வெயில் கொடுமை காரணமாக வடமாநிலங்களில் கடந்த 48 மணி நேரத்தில் 75க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
வெப்பம் அதிகரிக்கும் -
வெப்பம் அதிகரிக்கும் - pt web

டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப்பிரதேசம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் கடுமையான வெப்ப பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. பல இடங்களில் 50° செல்சியஸ்-க்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வரும் சூழலில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

வெப்பம் அதிகரிக்கும் -
உயிருக்கே ஆபத்தாகும் Heat stroke - அறிகுறிகள் என்னென்ன? தற்காப்பது எப்படி?
வெப்பம்
வெப்பம்புதியதலைமுறை

இந்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அதீத வெப்பநிலை காரணமாக 75க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில், 25 பேர் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் ஆவர். அதிகபட்சமாக ஒடிசாவில் 36 பேர் உயிரிழந்துள்ளனர் உத்தரப்பிரதேசத்தில் 20 பேரும் பீகாரில் 14 பேரும் ஜார்க்கண்டில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

வெப்பம் அதிகரிக்கும் -
வாட்டி வதைக்கும் வெயில்... ஒரே நாளில் வெப்பவாதத்தால் 40 பேர் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசத்தை பொருத்தவரை மிர்சாப்பூர் மாவட்டத்தில் 13 நபர்களும் சோன்பந்திரா மாவட்டத்தில் 2 நபர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பீகார் மாநிலத்தின் போஜ்பூரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர.

death
deathpt desk

ஜார்கண்ட் மாநிலத்தில் சுமார் 1300க்கும் அதிகமானோர் அதீத வெப்பநிலை சார்ந்த உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்பம் அதிகரிக்கும் -
Heat Stroke என்பது என்ன? ஏற்படுவதற்கான காரணம் என்ன? யாருக்கெல்லாம் ஏற்பட வாய்ப்புள்ளது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com