அதிக சத்தத்துடன் விநாயகர் ஊர்வலம்: வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவவீரர்

அதிக சத்தத்துடன் விநாயகர் ஊர்வலம்: வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவவீரர்
அதிக சத்தத்துடன் விநாயகர் ஊர்வலம்: வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவவீரர்

ஹைதராபாத்தில் அதிக சத்தத்துடன் விநாயகர் ஊர்வலம் நடத்தியதால் ஆத்திரமடைந்த முன்னாள் ராணுவவீரர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இவர்மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இவரின் துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.

விநாயகரை கரைக்கும் நிகழ்வில் கணேஷ் பந்தலில் இருந்து வந்த உரத்த இசையால் கோபமடைந்த ஹைதராபாத் நர்சிங்கியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் நாகமல்லேஷ் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் சைபராபாத் எல்லையில் உள்ள ஹைதர்ஷகோட் கிராமத்தின் சிவம் ஹைட்ஸ் குடியிருப்பில் நடந்தது. இந்த திடீர் துப்பாக்கி சத்தம் காரணமாக, சுற்றுப்புறங்களில் பதற்றம் நிலவியது, இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.

இது குறித்து நர்சிங்கி காவல்துறை “இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307 (கொலை முயற்சி) இன் கீழ் இவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொது இடத்தில் ஆயுதங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்தியதற்காக ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தினார். காவல்துறையினர் துப்பாக்கியை கைப்பற்றியதுடன் நாக மல்லேஷையும் காவலில் வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com