ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - 45 பயணிகள் இருந்த போது நிகழ்ந்த கொடுமை

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - 45 பயணிகள் இருந்த போது நிகழ்ந்த கொடுமை
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - 45 பயணிகள் இருந்த போது நிகழ்ந்த கொடுமை

டெல்லியில் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் பேருந்து உதவியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டிற்குத் திரும்பும் வகையில் தனியார் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் அவரை தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

பேருந்து மதுரா மாவட்டம் மன்ட் சோதனைச் சாவடி அருகே வந்த போது, 112 என்ற அவசரகால எண்ணைத் தொடர்பு கொண்ட அந்தப் பெண்,காவலர்களிடம் பேருந்து உதவியாளரால் தான் கற்பழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பேருந்தை ஆய்வு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட உதவியாளரை போலீஸார் கைது நீதிமன்ற காவலில் அடைத்தனர். இது குறித்தான அடுத்தக்கட்ட விசாரணையை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com