புதிய குடிமக்கள் பதிவேட்டில் ’கார்கில் வீரர்’ பெயர் இல்லை!

புதிய குடிமக்கள் பதிவேட்டில் ’கார்கில் வீரர்’ பெயர் இல்லை!
புதிய குடிமக்கள் பதிவேட்டில் ’கார்கில் வீரர்’ பெயர் இல்லை!

புதிதாக வெளியிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில், அசாமில் வெளிநாட்டவர் எனக் கூறப்பட்ட கார்கில் வீரர் பெயர் இடம்பெறவில்லை.

அசாமில், பங்களாதேஷை சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஊடுருவி வருவதால், தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டு இருந்தன. மேலும் 37 லட்சம் பெயர்கள் நிராகரிக்கப் பட்டு இருந்தன. இரண்டு லட்சம் பெயர்கள், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டன.

இந்நிலையில் கவுகாத்தி, சத்கோன் பகுதியை சேர்ந்த முகமது சனாவுல்லா (57) என்பவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என சந்தேகம் இருப்பதாக, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டது. இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். கார்கில் போரில் கலந்து கொண்டவர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், அசாம் எல்லைப் பாதுகாப்பு போலீசில், துணை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரது குடியுரிமை தொடர்பான வழக்கை, வெளிநாட்டினர் தீர்ப்பாயம் விசாரித்து, வெளிநாட்டுக்காரர் என்று கூறியது. பின்னர் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் அவர் குடும்பத்தினர் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கப் பட்டது.

இதற்கிடையே, புதிய குடிமக்கள் பதிவேடு இன்று வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள இந்த இறுதிப்பட்டியலில் 19 லட்சத்து 6657 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. பெயர் விடுபட்டிருப்பவர்கள் தாங்கள் இந்தியர்தான் என்பதை ஆதாரத்துடன் தீர்ப்பாயத்தில் நிரூபிக்க வேண்டும். 

இந்தப் பட்டியலில் சனாவுல்லா பெயரும் இடம் பெறவில்லை. அவரது 2 மகள்கள் மற்றும் மகன் பெயரும் இடம்பெறவில் லை. ஆனால், அவர் மனைவியின் பெயர் இடம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com