“மூன்றில் இரு பங்கு 2,000 ரூபாய் தாள்கள் திரும்ப வந்துவிட்டன” - ரிசர்வ் வங்கி தகவல்

புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் தாள்களில் மூன்றில் இரு பங்குக்கும் அதிகமானவை வங்கிகள் மூலம் திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் 2,000 ரூபாய் தாள்களை வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என கடந்த மே 19 - ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், “கடந்த மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி 2,000 ரூபாய் தாள்களாக ரூ. 3,62,000 கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. அதில் 2,41,000 கோடி ரூபாய் திரும்பிவந்துள்ளது. 2,000 ரூபாய் தாள்களைத் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் எந்தப் பாதிப்பும் தென்படவில்லை” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com