உக்ரைனிலிருந்து இந்தியா அழைத்து வரப்பட்ட தமிழக மாணவர்கள்... எல்.முருகன் வரவேற்பு

உக்ரைனிலிருந்து இந்தியா அழைத்து வரப்பட்ட தமிழக மாணவர்கள்... எல்.முருகன் வரவேற்பு
உக்ரைனிலிருந்து இந்தியா அழைத்து வரப்பட்ட தமிழக மாணவர்கள்... எல்.முருகன் வரவேற்பு

உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து, இன்று மட்டும் 198 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

போர் நீடிக்கும் உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறும் இந்திய மாணவர்கள், ஹங்கேரி, ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளில் காத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஹங்கேரி, ருமேனியா நாடுகளின் எல்லைகளில் இருந்து மீட்கப்பட்ட 198 தமிழக மருத்துவ மாணவர்கள் இன்று டெல்லி வந்து சேர்ந்தனர்.

டெல்லி விமானநிலையத்திற்குச்சென்று அவர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். பிரதமரின் முயற்சியால் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களை வரவேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தனதுட்விட்டர் பக்கத்தில் எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com