மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்த கேள்வி.. பதில் சொல்லாமல் ஓட்டம் பிடித்த மத்திய அமைச்சர்!

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் தொடர்பான பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் மத்திய அமைச்சர் மீனாக்‌ஷி லெகி சாலையில் ஓடும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் மீனாக்‌ஷி லெகியிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். எனினும் பத்திரிகையாளர் அடுத்தடுத்து இப்பிரச்னை தொடர்பாக கேள்வி கேட்டபோது அதற்கு பதில் அளிக்காமல் அமைச்சர் காரை நோக்கி ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com