இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு

இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு
இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சர்வதேச பயணிகளுக்கு 7 நாள் கட்டாய தனிமை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளுக்கு RTPCR பரிசோதனையும் கட்டாயமில்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com