ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார்... சதித் திட்டம் தொடர்பான வழக்கு முடித்துவைப்பு

ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார்... சதித் திட்டம் தொடர்பான வழக்கு முடித்துவைப்பு
ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார்... சதித் திட்டம் தொடர்பான வழக்கு முடித்துவைப்பு

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்குமோ என்பது குறித்த விசாரணை வழக்கை முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

கோகோய் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாக சொல்லி, கடந்த 2019இல் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் அதை தற்போது முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் “வழக்கு தொடர்பான மின்னணு ஆவணங்களை மீட்பதில் சாத்தியக் குறைவு உள்ளதால் வழக்கை முடித்து வைக்கிறோம்” எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்துள்ளார்.

முன்னாள் நீதிபதி பட்நாயக் குழுவினால் வாட்ஸ்அப் செய்திகள் போன்ற மின்னணு ஆவணங்களை மீட்க முடியாததால் இந்த விசாரணை முடித்து வைப்பதாக தெரிவித்துள்ளது. 

கடந்த 2014-இல் உச்ச நீதிமன்றத்தில் வேலைக்காக சேர்ந்த பெண் ஒருவர் 2018-இல் நீதிபதி கோகாய் வீட்டில் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தபோது தன்னை பாலியல் ரீதியாக சீண்ட முயற்சித்ததாகவும், அதற்கு தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அந்த பெண் கோகாய் மீது குற்றம்சாட்டியிருந்தார். இது நீதிபதி கோகாய் மீது திணிக்கப்பட்ட மிகப்பெரிய சதித்திட்டம் என வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com