30 வருடங்களாக தயாராகும் தூண்கள்: ஏப்ரல் முதல் அயோத்தியில் ராமர் கோயில் பணி?

30 வருடங்களாக தயாராகும் தூண்கள்: ஏப்ரல் முதல் அயோத்தியில் ராமர் கோயில் பணி?
30 வருடங்களாக தயாராகும் தூண்கள்: ஏப்ரல் முதல் அயோத்தியில் ராமர் கோயில் பணி?

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது

70 ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி நிலம் தொடர்பான விவகாரம் முடிவுக்கு வந்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ராமர் கோயில் கட்டும் பணி தீவிரமாகியுள்ளது. வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கோயில் கட்டும் பணி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கோயிலை முழுவதுமாக கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு உருவாக்கியுள்ள வடிவமைப்பை பின்பற்றி இந்த கோயில் கட்டப்படும் என கூறப்படுகிறது.

முன்னதாக ராமர் கோயில் கட்டுவதற்காக கற்தூண்களையும், உத்தரம் போன்ற அமைப்புகளையும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு ஏற்கெனவே உருவாக்கி வருகிறது. 1990 முதலே இந்த பணிகளை விஎச்பி செய்து வருகிறது. மேலும் தற்போது 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஎச்பி வடிவமைப்பின் படி, கோயிலின் உயரம் 128 அடி, அகலம் 140 அடியாகும். மொத்தம் 212 கல் தூண்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 106 தூண்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ராமர் கோயில் கட்டுமான திட்டம் குறித்து பேசிய ராமர் கோயில் பணிமனையின் கண்காணிப்பாளர் ஒருவர் ,நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கோயில் கட்டும் பணி வேகமெடுக்கும். இன்னும் 5 ஆண்டுகளில் கோயிலைக் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com