நாளையுடன் நிறைவடைகிறது மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனுதாக்கல்

நாளையுடன் நிறைவடைகிறது மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனுதாக்கல்

நாளையுடன் நிறைவடைகிறது மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனுதாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் வேட்பு மனுதாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர் இன்று மனுதாக்கல் செய்கின்றனர். அதேபோல தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் போட்டியிடுகிறார், அவரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட சு.கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஷ்குமார் ஆகியோர் ஏற்கனவே மனுதாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் ஆறு இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.



மாநிலங்களவை தேர்தலில் 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது பாரதிய ஜனதா கட்சி. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து போட்டியிடுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com