’வீட்டுத்தனிமையில் இருக்கிறேன்’ - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்-க்கு கொரோனா தொற்று உறுதி

’வீட்டுத்தனிமையில் இருக்கிறேன்’ - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்-க்கு கொரோனா தொற்று உறுதி
’வீட்டுத்தனிமையில் இருக்கிறேன்’ - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்-க்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதன்முதலாக நாட்டில் 2 பேருக்கு ஒமைக்கரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. நேற்று கொரோனாவால் 1,59,632 பேர் பாதிக்கப்பட்டனர். இன்று புதிதாக 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பைவிட 12.6 சதவீதமாகும்.

இந்நிலையில், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “குறைவான பாதிப்புகளுடன் எனக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நான் வீட்டு தனிமையில் இருக்கிறேன். சமீபத்தில் என்னை நேரில் சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கெள்வதுடன், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com