பாதுகாப்பு துறையில் 101 பொருட்களின் இறக்குமதிக்கு தடை : ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு துறையில் 101 பொருட்களின் இறக்குமதிக்கு தடை : ராஜ்நாத் சிங்
பாதுகாப்பு துறையில் 101 பொருட்களின் இறக்குமதிக்கு தடை : ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், சுயசார்பு இந்தியாவின் திட்டத்தை ஊக்குவிக்க பாதுகாப்புத்துறையில் 101 பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அமைப்புடன் ஆலோசனை நடத்திய பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தேவையான அளவு உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பொருட்கள் மட்டும் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் பாதுகாப்பு உபகரணம், தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து தரும் அமைப்புக்கு புது வாய்ப்பை ஏற்படுத்தி தரமுயும் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com