நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியலில் தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து பேசினார். குறிப்பாக கட்சி தொடங்கினால் தான் பின்பற்றப்போகும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். அதில், முதல்வர் பதவியை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே என் முடிவு என தெரிவித்தார். மேலும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த நிர்வாகிகள் சந்திப்புக்கு பிறகு பேசிய ரஜினி ஒரே ஒரு ஏமாற்றம் என தெரிவித்திருந்தார். அது குறித்து இன்று அவர் விளக்கம் அளித்தார். அதில், நிர்வாகிகளிடம் முதல்வர் பதவி வேண்டாம் என்று நான் கூறினேன். அதனை நிர்வாகிகள் ஏற்கவில்லை. அதனைத்தான் நான் ஏமாற்றம் என கூறினேன் என தெரிவித்தார்.