இந்தியா
ராஜஸ்தான்: Money Heist முகமூடி அணிந்தபடி பணநோட்டுகளை வீசிய நபர்!
ஜெய்ப்பூரில் Money Heist முகமூடியை அணிந்து பணத்தை வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், Money Heist முகமூடியை அணிந்த நபர் ஒருவர், பணநோட்டுகளை வீசி எறியும் காட்சிகள் வெளியாகி உள்ளன. சாலையின் நடுவே காரை நிறுத்திவைத்துவிட்டு, அதன்மீது ஏறிநின்று அந்த நபர் வீசிய ரூபாய் நோட்டுக்களை, அங்கிருந்த மக்கள் கீழிருந்து முண்டியடித்தபடி எடுத்தனர்.
இந்த காட்சிகள் வெளியானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.