ராஜஸ்தானில் பட்டாசு விற்பனை, வெடிக்க தடை - முதல்வர் அசோக் கெலாட் அதிரடி

ராஜஸ்தானில் பட்டாசு விற்பனை, வெடிக்க தடை - முதல்வர் அசோக் கெலாட் அதிரடி
ராஜஸ்தானில் பட்டாசு விற்பனை, வெடிக்க தடை - முதல்வர் அசோக் கெலாட் அதிரடி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க தடை என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.  

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் மாநிலத்தில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க தடை விதிக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. நேற்று கொரோனா வைரஸ் நிலைமையை மறுபரிசீலனை செய்தபோது, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்த சவால் மிகுந்த நேரத்தில் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது என்று கூறியுள்ளார்.

மாநிலத்தில் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், முறையான சான்றிதழ் இல்லாமல் இயங்கும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கெலாட் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள் தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் முதல்வர் அசோக் கெலாட், ’’கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக மாநிலத்தில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை செய்வதற்கான முடிவை மாநில அரசு எடுத்துள்ளது’’ என தன்னுடைய ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com