சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை கூடாது - உயர்நீதிமன்றம்

சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை கூடாது - உயர்நீதிமன்றம்
சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை கூடாது - உயர்நீதிமன்றம்

ராஜாஸ்தானில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது தற்போதைக்கு நடவடிக்கை கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தானில் அசோக்கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்கள் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டு சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதை எதிர்த்து சச்சின் பைலட் உள்பட 19 பேரும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடினர். இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்க தடைவிதிக்குமாறு சபாநாயகர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், சபாநாயகர் விடுத்த நோட்டீஸுக்கு எதிரான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அரசு தரப்பில் பேரவையில் கலந்து கொள்ளாததற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்றும் இது ஆரம்பகட்ட விச்சாரணை என்பதால் நீதிமன்றம் இதில் தலையிடுவது அவசியமற்றது எனவும் வாதிடப்பட்டது.

பின்னர் வாதாடிய அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பு நாங்கள் விளக்கம் அளித்தாலும் அளிக்காவிட்டாலும் தகுதி நீக்கம் செய்வார்கள் எனவும் எனவே தகுதி நீக்கம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ராஜாஸ்தானில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது தற்போதைக்கு நடவடிக்கை கூடாது என உத்தரவிட்டது. மேலும், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதன் நகர்வுகளை பொருத்து இறுதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசை ஒரு தரப்பாக சேர்க்க நீதிமன்றம் அனுமதியும் வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com